Thursday, October 24, 2013

இந்தியாவில் வறுமை

உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியாவில் ஏழைமை பரவலாகக் காணப்படுகின்றது. இந்திய திட்டக் குழுவினால் பயன்படுத்திய மதிப்பீட்டு வரயறையின்படி, 2004-05 ஆண்டுகளில் 27.5% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்; இக்கணக்கு 1977-1978 ஆண்டுகளில் 51.3% ஆக இருந்ததிலிருந்தும், 1993-1994 ஆண்டுகளில் 36% ஆக இருந்ததிலிருந்தும் தற்பொழுது சரிந்துள்ளது[1]. 2005 ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் (World Bank) கணிப்பீட்டின்படி, இந்திய மக்கள் தொகையில் 42 சதவீதம் மக்கள் அனைத்துலக வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இது 1980 ஆம் ஆண்டில் 90 சதவீதமாக இருந்தது. அனைத்துலக வறுமைக்கோட்டின் படி நகரத்தில் வாழ்வோர் நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவாக ஈட்டுவதும் (ஒரு நாளைக்கு 1.25 டாலர் என்பது அதற்கு ஈடான பொருள் வாங்கு திறன் நாளொன்றுக்கு 21.6 இந்திய உருபாய்), சிற்றூர்களில் வாழ்வோர் நாளொன்றுக்கு இந்திய உருபாய் 14.3 க்கும் கீழாக ஈட்டுவதுமாகும்.[2] ஐக்கிய நாட்டு வளர்ச்சி திட்டப்படியான, மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவின் 75.6% மக்கள் தொகையினர் ஒரு நாளைக்கு தலா $2 குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், சிலர் 41.6% பேர் ஒரு நாளைக்கு $1 குறைவாகப் பெற்று பாகிஸ்தானின் 22.6% பேருடன் ஒப்பிடுகையில் வாழ்கின்றனர்.[3]
இந்தியாவில் உயர்ந்த அளவில் இருக்கும் வறுமைக்கான காரணங்களாக சார்த்திக் கூறப்படும் காரணங்களில் அதன் பிரித்தானிய ஆட்சியின் கீழான வரலாறு, பெரும் மக்கட்தொகை மற்றும் குறைந்த கல்வியறிவு ஆகியவையாகும். மேலும் முக்கியமானவை இந்தியாவின் சமூக கட்டமைப்பு, இந்தியாவின் சாதியமைப்பு உட்பட, மற்றும் இந்தியாவின் சமூகத்தில் பெண்களின் பாத்திரம் ஆகியவையாகும். கடந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி விவசாயத்தை சார்ந்திருந்தது, அதன் விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டப் பொருளாதார கொள்கைகள் ஊக்கங்கெடுப்பதாக இருந்தது.
1950களிலிருந்து இந்திய அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்கள் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை, உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள், கடன்கள் பெற அணுகுவது, விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விலை ஆதரவுகள் மற்றும் கல்வி மேம்பாடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர். இத்தகைய வழிமுறைகள் பஞ்சத்தை ஒழிக்க, முழுமையான வறுமைக்கோட்டினை பாதியளவுக்கு மேல் குறைக்க, எழுத்தறிவின்மையை குறைக்கவும் மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினை குறைக்க உதவின.[4] இருப்பினும், 1990களின் நடுப்பகுதிகளிலிருந்து 30 மில்லியன் மக்கள் பசியின் வரிசைப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர் மேலும் 46% குழந்தைகள் எடை குறைவாக இருந்தனர்.[5]

வறுமை

வறுமை என்பது, உணவுஉடைஉறைவிடம், பாதுகாப்பான குடிநீர்கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது. வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை,அனைத்துலக வளர்ச்சிபொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.
வறுமையினால் ஏற்படும் வலி, துன்பம் என்பவை காரணமாக, வறுமை விரும்பத்தகாத ஒன்றாகவே கொள்ளப்படுகின்றது.சமயங்களும், பிற அறநெறிக் கொள்கைகளும் வறுமையை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகளைச் சிறப்பித்துக் கூறுகின்றன. என்னும், சில ஆன்மீகச் சூழல்களில் உலகப் பொருட்களைத் துறந்து பொருள்சார் வறுமை நிலையை ஏற்றுக்கொள்ளல் சிறப்பானதாகக் கருதப்படுவதும் உண்டு.
வறுமை தனிப்பட்டவர்களையோ அல்லது குழுக்களையோ பாதிக்கக்கூடும். இது வளர்ந்துவரும் நாடுகளில் மட்டுமன்றிவளர்ந்த நாடுகளிலும், வறுமை வீடின்மை போன்ற பல வகையான சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றது.